2026 ஜனவரி 28, புதன்கிழமை

மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் பலி

Janu   / 2026 ஜனவரி 28 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புலத்கோஹுப்பிட்டிய, பன்னல பகுதியில் செவ்வாய்க்கிழமை (27) இரவு, இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பெண் ஒருவர் கரவனெல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

54 வயதான வேலு வசந்தி குமாரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் தனது பேத்தியுடன் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது அவர் மீது மோட்டார் சைக்கிளொன்று மோதியதாகவும் இதில் சிறுமிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை எனவும் தெரியவருகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X