Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2017 நவம்பர் 28 , பி.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரவீந்திர விராஜ் அபயிசிறி
மாத்தளை மாவட்டத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, விரைவில் நிரந்தரக் காணியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹார தெரிவித்தார்.
மாத்தளை மாவட்டம் அபிவிருத்திக் குழு கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாத்தளை மாவட்ட மக்கள் எதிர்நோக்கியுள்ள மண்சரிவு அபாயம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
“மாத்தளை-தொடம்தெனிய பிரதேசத்தில் 106 வீடுகள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், குறித்த வீடுகளில் வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டவர்கள் இவர்களுக்கான எந்த வேலைத்திட்டங்களையும் சரியான முறையில் முன்னெடுக்காததால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக” மத்திய மாகாண சபை உறுப்பினர் டபிள்யூ.எம்.யசமான தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும்போதே, ரஞ்சித் அலுவிஹார எம்.பி மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,
“மண்சரிவு காரணங்களால் வீடுகள் மற்றும் சொத்துகளை இழப்பவர்களுக்கு மாத்தளை- வாரியபொல பெருந்தோட்டத்தில் 8 ஏக்கர் நிலம் வழங்குவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதுதொடர்பில் மாத்தளை பிரதேச செயலாளர் கே.பி.மதுவந்தியிடம் அறிக்கையை பெற்றுக்கொடுக்குமாறும் அவர், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
20 minute ago
40 minute ago
1 hours ago