Freelancer / 2023 நவம்பர் 05 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை மற்றும் வட்டகொட ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இன்று (05) பிற்பகல் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக மண் மேடு சரிந்துள்ளதாகவும், தண்டவாளத்தில் விழுந்துள்ள மண் கண்டங்களை அகற்றி ரயில் பாதையை சீரமைத்து உடனடியாக ரயில்கள் இயக்கப்படும் எனவும் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
மேலும் மண்மேடு வீழ்ந்துள்ளதன் காரணமாக ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. M
பி.கேதீஸ்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .