R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 31 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
பேராதனை பாலத்திலிருந்து மஹாவலி ஆற்றில் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்ட பேராதனை பல்கலைக்கழக மாணவனின் சடலம், இன்று (31) பகல் மீட்கப்பட்டுள்ளது.
மஹாவலி ஆற்றின் கன்னொருவ- சீமாமாலகய பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் 3ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த, பெல்மடுல்ல பகுதியைச் சேர்ந்த 24 வயதான குறித்த இளைஞன், 27ஆம் திகதி மாலை பேராதனை பாலத்திலிருந்து ஆற்றிக்குள் பாய்ந்துள்ளார்.
உயிரிழந்த மாணவனின் மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்றும் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026