2026 மே 09, சனிக்கிழமை

dd

மாணவர்களின் மரணம் தொடர்பில் ஆராய மூவர் அடங்கிய குழு

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை- கோமரங்கடவல குளத்தில் மூழ்கி உயிரிழந்த, ஹாலி-எல பிரதேச பாடசாலை மாணவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு மூவர் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதென, ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வல தெரிவித்துள்ளார்.

இந்த குழுவில் ஊவா மாகாண கல்வி அமைச்சின் அதிகாரி, கல்வி திணைக்களத்தின் அதிகாரி, கல்வி பணிப்பாளர் ஆகியோர் உள்ளடங்கியுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

குறித்த விசாரணைக் குழுவினர் சகல தரப்பினரதும் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்கும் சம்பவம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .