R.Maheshwary / 2022 நவம்பர் 17 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
ருவன்வெல்ல பொது நூலகம் மற்றும் வாசகர் சமூகம் என்பன இணைந்து மஹரகம அபெக்ஸா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் நோயாளர்களுக்கு தேவையான தலைமுடியை தானமாக வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
ருவன்வெல்ல பொது நூலக வளாகத்தில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில், 135 பேர் வரை தமது தலைமுடியை வழங்க முன்வந்ததுடன், பெரும்பாலான மாணவிகள் இந்த விடயத்துக்கு முன்வந்துள்ளனர்.
இதற்கு ருவன்வெல்ல காயத்ரி சலூன் தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.
இந்த நிகழ்வில் ருவன்வெல்ல பிரதேசசபையின் தவிசாளர் சமன் குலசூரிய, செயலாளர் உதய ஜயவிக்ரம உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
19 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
4 hours ago