Editorial / 2019 நவம்பர் 19 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஷ் கீர்த்திரத்ன
மாத்தளை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருக்கு, இனந்தெரியாத சிலர் மரண அச்சுறுத்தல் விடுத்துச் சென்றுள்ளனர் என்று, மாத்தளை பொலிஸில், நேற்று (18) இரவு முறையிடப்பட்டுள்ளது.
மாத்தளை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான பிரசன்ன அலுவிஹாரவின் குடும்பத்தினரே மரண அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.
மேற்படி உறுப்பினரின் வீட்டுக்கு வாகனம் ஒன்றில் வந்தக் குழுவினர், உறுப்பினரைக் கேட்டு அச்சுறுத்தியதாகவும் உறுப்பினர் வீட்டில் இல்லாததைத் தெரிந்த்துகொண்டதன் பின்னர், அவரது மனைவி மற்றும் பிள்ளைகளை அச்சுறுத்திவிட்டுச் சென்றுள்ளனர் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
9 hours ago
9 hours ago
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago
13 May 2026