Freelancer / 2023 ஏப்ரல் 24 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
கந்தகெடிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கனுவவன்வ பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை கேபிள் அன்டனா பொருத்தச் சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை கன்வன்வ மஹியங்கன வீதியில் 16 கட்டையில் வசிக்கும் 56 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
மரத்தின் மீதேறி அன்டனா வயரை தூக்கி எறிந்தபோது உயர் அழுத்த மின்கம்பியில் அந்த வயர் விழுந்தததில் மின்சாரம் பாய்ந்தது என தெரியவருகின்றது.
சடலம், பதுளை பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
9 hours ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Jan 2026