2026 ஜனவரி 21, புதன்கிழமை

முடக்கப்பட்ட பிரதேசத்துக்கு மதுபானங்களைக் கொண்டுச்சென்ற இருவர் கைது

Kogilavani   / 2021 மே 18 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஹட்டன் என்பீல்ட் கிராம சேவகர் பிரிவுக்குள், பயணத்தடையை மீறி வானொன்றில் மதுபானங்களைக் கொண்டுச் சென்ற இருவரை, ஹட்டன் பொலிஸார் நேற்று முன்தினம் இரவு கைதுசெய்துள்ளனர்.

வானை மறித்து சோதனையிட்ட பொலிஸார், 15 மதுபான போத்தல்கள், 30 பியர் டின்களைக் கைப்பற்றியுள்ளதுடன் மேற்படி இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டப் பிரதேசத்தில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பதற்காகவே மதுபானங்கள் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X