Editorial / 2020 மே 05 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஷ் கீர்த்திரத்ன
மாத்தளை மாவட்டத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து, மாத்தளை ரத்தொட்டை பிரிவில், 19 குடும்பங்களைச் சேர்ந்த 171 பேர், நேற்று (4) முதல் சுயத்தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று, ரத்தொட்டை பிரதேச செயலாளர் நிஷாந்த தினுப்பிரிய ஹேரத் தெரிவித்தார்.
மேற்படி குடும்பங்களைக் கண்காணித்தல் மற்றும் ஒருங்கிணைக்கும் பணிகளை, ரத்தொட்டை பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பாளர்களான சந்தருவான் ராஜசிங்க, சமீர விஜேகோன் ஆகியோர் முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்படி குடும்பங்கள் தொடர்பிலான தகவல்கள், ரத்தொட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago