Editorial / 2025 ஏப்ரல் 01 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற எல்லா ஒடிஸி ரயிலில் பயணித்த ஆஸ்திரேலிய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், செல்ஃபி எடுக்க ரயில் நடைமேடையில் தொங்கியபோது இரும்பு கம்பத்தில் மோதி ரயிலில் இருந்து விழுந்து காயமடைந்து நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
மலையக ரயில் பாதையில் நானுஓயா மற்றும் அம்பேவெல ரயில் நிலையங்களுக்கு இடையில், திங்கட்கிழமை (31) மாலை நடந்த இந்த விபத்தில் காயமடைந்த பெண், 27 வயதுடைய ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஆவார்.
அவர் ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வந்து கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு பயணித்த எல்ல ஒடிஸி ரயிலில் எல்லவுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அவர் மற்ற சுற்றுலாப் பயணிகள் குழுவுடன் எல்லாவுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ரயிலின் நடைமேடையில் தொங்கி செல்ஃபி எடுக்க முயன்றபோது, ரயில் பாதைக்கு அருகில் இருந்த இரும்புக் கம்பத்தில் மோதி, ஓடும் ரயிலில் இருந்து விழுந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹப்புத்தளை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
11 minute ago
15 minute ago
25 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
25 minute ago
31 minute ago