2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

லோகி தோட்டப் பாதையை புனரமைக்குமாறு கோரிக்கை

சுஜிதா   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டகலை பிரதேச சபைப் பிரிவுக்குட்பட்ட லோகி தோட்டத்துக்கான பாதை, கடந்த பல ஆண்டுகளாகச் செப்பனிடப்படாமையால், குறித்த  பாதையைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென, பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இந்தப் பாதையைச் செப்பனிடுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு 2 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும்கூட, பாதை இதுவரை செப்பனிடப்படவில்லை என்று சுட்டிக்காட்டும் மக்கள், பாதை அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதி, தலவாக்கலை மல்லியப்பூ கதிரேசன் கோவிலுக்கு அருகில் இருந்து, லோகி தோட்டம் வரை செல்லும் சுமார் 3 கிலோமீற்றர் தூரமுடைய பாதையே, புனரமைப்பின்றிக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .