2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் நான்கு பொலிஸார் காயம்

Editorial   / 2017 நவம்பர் 07 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை வெல்லவாய- எதிலிவெவ பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நான்கு பொலிஸார், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் ஜீப் வண்டியின் மீது, லொறியொன்று மோதியதில், பொலிஸ் ஜீப்பில் இருந்த நான்கு பொலிஸாரும் காயமடைந்துள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சாரதி கைதுசெய்யப்படும்போது, மதுபோதையில் இருந்துள்ளாரென, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .