2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

வீசப்படும் முகக் கவசங்கள் தொற்று பரவும் அபாயம்

R.Maheshwary   / 2021 நவம்பர் 21 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருணகுமார

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக பயன்படுத்தப்படும் முகக் கவசங்கள்,  சுற்றாடலில் ஆங்காங்கே வீசப்படுவதன் காரணமாக மாத்தளை மாவட்டத்தில் பாரிய சுற்றாடல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக மாத்தளை மாவட்டத்தில் பிட்டவல மேட்டு நிலம், மொரஹாகந்த, நாவுல மற்றும் மாத்தளை ஆகிய இடங்களில் ஆங்காங்கே அதிகளவான முக்க்கவசங்கள் வீசப்பட்டுள்ளமையை காணக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இவ்வாறு முகக் கவசங்கள் சுற்றாடலில் வீசப்படுவதால், அதன்மூலம் மீண்டும் தொற்று தலைதூக்கும் ஆபத்து காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே இந்த விடயம் தொடர்பில் சுகாதார தரப்பினர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .