R.Maheshwary / 2021 நவம்பர் 15 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
வார இறுதி நாளான நேற்று (14) ஹட்டனிலிருந்து கொழும்புக்குச் செல்வதற்கான போதியளவு பஸ்கள் சேவையில் ஈடுபடாமையால் பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
காலையிலிருந்து பல மணி நேரம் கொழும்புச் செல்ல காத்திருந்தும் போதியளவு பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை என பயணிகள் குற்றஞ்சுமத்தினர்.
எனினும் வழமைப்போல் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும் வழமைக்கு அதிகமாக அதிகளவு பயணிகள் நேற்று (14) கொழும்புச் செல்ல வருகைத் தந்திருந்ததாக ஹட்டன் டிப்போ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன், கொழும்பிலிருந்து ஹட்டனுக்குச் சென்ற பஸ்களை உடனடியாகவே கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago