Editorial / 2025 ஜூன் 06 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஷ்ணா
ஹட்டன் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காணாமல் போனதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில், ஹட்டன் நகரின் சைட் வீதியில், வியாழக்கிழமை (05) மாலை 06 மணி அளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போயுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டையடுத்து விரைந்து செயற்பட்ட ஹட்டன் பொலிஸார் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கினர். இந் நிலையில் நோர்வூட் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய நோர்வூட் வெஞ்ஜர் கீழ் பிரிவில் உள்ள குடியிருப்புப் ஒன்றை இரவு 11.30 மணியளவில் சோதனையிட்டபோது காணாமல் குறித்த மோட்டார் சைக்கிள் மறைத்து வைத்திருந்த நிலையில் மீட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவத்தில் இருவர் தொடர்புபட்டுள்ளது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹட்டன், நோர்வூட் பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
12 minute ago
15 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
15 minute ago
1 hours ago
1 hours ago