R.Maheshwary / 2022 ஜனவரி 03 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
சமையல் எரிவாயு தட்டுப்பாடானது நாடு முழுவதும் அனைத்து மக்களையும் பாதித்துள்ள நிலையில், சமையல் எரிவாயு இன்மையால் ஹட்டன் நகரிலுள்ள பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.
குறித்த நேரத்தில் சமையல் எரிவாய கிடைக்காமை மற்றும் கிடைக்கும் சமையல் எரிவாயு அடுப்புகளை பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் என்பவற்றால் தமது ஹோட்டல்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மூடப்பட்டுள்ள ஹோட்டல்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்வாறு ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதால், தமது வருமானம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், தமது ஹோட்டலகளில் பணியாற்றியவர்களின் பொருளாதாரமும் பெரிதும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .