2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

லிந்துலை, தங்ககெல தோட்டத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு

Kogilavani   / 2013 ஜனவரி 12 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.சுவர்ணஸ்ரீ, எஸ்.தியாகு

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெராயா-  தங்ககெல தோட்டத்தில் ஆணொருவரின் சடலத்தினை லிந்துலை பொலிஸார் இன்று சனிக்கிழமை மீட்டுள்ளனர்.

பாலச்சந்திரன் ராமைய்யா என்ற 50 வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலொன்றினைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X