2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Freelancer   / 2025 ஓகஸ்ட் 21 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பகுதிகளில் நாளை வெப்பநிலை அதிகரித்த மட்டத்தில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

இன்று (21) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை நாளை வரை செல்லுபடியாகும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் வெப்பக் குறியீடானது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X