2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் சார்ஜனை தாக்கிய மூவர் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 01 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.எம்.ரிஃபாத்

பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும்  சந்தேக நபர்கள் மூவரை கண்டி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கண்டி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் முன்பாக நேற்று வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்த உல்லாசப் பயணிகள் இருவரை வாகனத்தில் வந்த சிலர் தாக்கியதைக் கண்ட குறித்த  பொலிஸ் சார்ஜன்ட் அவர்களை சமரசம் செய்ய முயன்றபோது, வாகனத்தில் வந்த சிலர் இவரையும் தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட்; கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் மூவரையும் கண்டி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .