2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மின்சார வேலியில் சிக்கி 16 வயது சிறுவன் பலி

Kogilavani   / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.கோகுலன்

மின்சார வேலியில் சிக்குண்டு 16 வயது சிறுவன் பலியான சம்பவம் வெலிமடை தம்பவின்ன பகுதியில் நேற்று(29) மாலை இடம்பெற்றுள்ளது.

மேற்படி பகுதியைச் சேர்ந்த ரவிந்து டி சில்வா என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெலிமடை, தம்பவின்ன பகுதியில் சட்டவிரோதமாக மரக்கறி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டே இச்சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது வெலிமடை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .