2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் 4 மாணவர்களை சேர்க்குமாறு உத்தரவு

Princiya Dixci   / 2015 மே 31 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

நோட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலையொன்றில் கல்வி பயிலும் நான்கு மாணவர்களை எதிர்வரும் 3ஆம் திகதி வரை கண்டி வெரகல சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் விடுமாறு ஹட்டன் மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் இராஜேந்திரன், நேற்று சனிக்கிழமை (30) உத்தரவிட்டார்.

குறித்த மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கணினிகள் களவாடிய குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த பொலிஸார் நீதவான் முன்னிலையில் நேற்று இவர்களை ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .