2025 ஜூலை 05, சனிக்கிழமை

விபத்து: மூவர் காயம்

Kogilavani   / 2015 ஜூன் 01 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெளிஓயா கீழ்பிரிவு தோட்டத்திலிருந்து மேற்பிரிவுக்கு உரம் ஏற்றிச்சென்று கொண்டிருந்த டிரக்டர் வண்டி, வெளிஓயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இவ்விபத்து இன்று திங்கட்கிழமை(1) இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இழுவை வண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களில்; இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் ஒருவர் வட்டவளை வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .