2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

குளவி கொட்டு: 7 பேர் பாதிப்பு

Kogilavani   / 2015 ஜூன் 03 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ. மு.இராமச்சந்திரன்

ஹட்டன், ஹாட்லி தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 7 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை(3) பகல் இடம்பெற்றுள்ளது.

கொழுந்து பறித்துக்கொண்டிந்த வேளையில் தேயிலை  பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவிகள் இவ்வாறு தொழிலாளிகளை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நபரொருவர் உட்பட ஆறுபெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .