2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சிசுவை கைவிட்டு சென்ற தாய் கைது

Kogilavani   / 2015 ஜூன் 05 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

ஒரு நாளேயான சிசுவை கைவிட்டு தலைமறைவான சிசுவின் தாயை தெல்தெனிய பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

17 வயதுடைய யுவதியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கண்டி, தெல்தெனிய கும்புக்கந்துர பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில்,  புதன்கிழமை(3) சிசுவொன்று மீட்கப்பட்டு தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சிசுவின் தாயை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .