2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இரண்டு முறை திறப்பு விழா கண்ட ஆய்வுகூடங்கள்

Sudharshini   / 2015 ஜூன் 08 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஆரம்ப பாடசாலைகள் மற்றும் இடைநிலை பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம், கவரவில தமிழ் மகா வித்தியாலயம், லக்கம் தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளின் தொழில்நுட்ப ஆய்வுகூடங்களும்  இன்று  (08) திறந்து வைக்கப்பட்டன.

மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சர் எம்.ராம், லக்கம் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆய்வுகூடத்தை காலை 09.00 மணிக்கும், கவரவில தமிழ் மகா வித்தியாலத்தின் ஆய்வுகூடத்தை 10.00 மணிக்கும், நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆய்வுகூடத்தை 11 மணிக்கும் திறந்து வைத்தார்.

இதேவேளை, இராஜங்க கல்வி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், லக்கம் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆய்வுகூடத்தை காலை 10.00 மணிக்கும், கவரவில தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆய்வுகூடத்தை பிற்பகல் 12.00 மணிக்கும், நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆய்வு கூடத்தை பிற்பகல் 01.30 மணிக்கும் திறந்து வைத்தார்.

இராஜாங்க கல்வி அமைச்சர் வீ.இராதாகிஷ்ணன் தலைமையில் இடம் பெற்ற நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்திற்கான தொழில்நுட்ப ஆய்வு கூடத்தின் திறப்பு விழாவின் போது, நோர்வூட் கலகதடுப்பு பொலிஸார் வரவளைக்கப்பட்டு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் தொழில்நுட்ப ஆய்வு கூடத்தினை மீண்டும் அமைச்சர் திறந்து வைத்தார்.

ஆய்வுகூடத்தை திறந்துவைத்து கல்வி இராஜாங்க அமைச்சர் உரையாற்றுகையில்,

ஆய்வுகூட வேலைத்திட்டம் கல்வி அமைச்சுக்கு சொந்தமானது. அதனை பார்வையிடுவதுக்கும் திறப்பதுக்கும் எனக்கு அதிகாரம் உண்டு. மேலும் இவ்வாறான திறப்பு விழாவில் பாடசாலையில் அரசியல் செய்வதை தான் அனுமதிக்க மாட்டேன் என அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினரும் இந்து கலாசார அமைச்சருமான எம்.ராம் கருத்து தெரிவிக்கையில்,

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களை பார்வையிடுவதுக்கோ அல்லது திறந்து வைப்பதுக்கோ, மத்திய மாகாண கல்வி அமைச்சுக்கே அதிகாரம் உண்டு. அரசாங்க கல்வி அமைச்சுக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X