2025 ஜூன் 28, சனிக்கிழமை

மரப்பலகைகளுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூன் 22 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

சட்டவிரோதமாக  பலா மற்றும் மஹோகனி மரப் பலகைகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த   லொறியொன்றை கண்டி – குருநாகல் வீதியில்  கட்டுகஸ்தோட்டை பொலிஸார்; நேற்று ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

மரத்தூள் பொதிகளை  ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லொறியை கண்ட கட்டுகஸ்தோட்டை பொலிஸார், அதை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். லொறியின்; மேற்புறத்தில் மரத்தூள் பொதிகளும் அதற்கு கீழ், பலா மற்றும் மஹோகனி மரப்பலகைகளும் காணப்பட்டுள்ளன.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .