Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Kogilavani / 2015 ஜூன் 25 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணி ஸ்ரீ
ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் ஐந்து வருடங்களுக்குள் ஆசிரியர் தகுதிக்கான பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய வேண்டுமென சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.
இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள மலையகப் பாடசாலைகளுக்கு ஆசிரியர் உதவியாளராக நியமிக்கப்பட்டவர்கள் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து உதவியாளர் என்ற சொல்லை நீக்கி ஆசிரியர் தரத்துக்கு உள்வாங்கப்பட்டு எதிர்வரும் காலங்களில் கல்வி அதிகாரிகளாகவும் கல்வி பணிப்பாளராகவும் தமது பதவியை உயர்த்திகொள்ள வேண்டும்' என்றும் அவர் தெரிவித்தார்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மேலும் தெரிவித்தார்.
மேற்படி மாகாணத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கு ஆசிரியர் உதவியாளர்களாக நியமனம்பெற்ற 72 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை(24) இரத்தினபுரியில் அமைந்துள்ள சப்ரகமுவ மாகாண சபையின் கேட்;போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ்மொழி மூல பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வந்தது. 740 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக காணப்பட்டனர்.
இதுகுறித்து ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சின் கவனத்துக்கு கொண்டுவந்ததன் பயனாகவே இம்மாகாணத்துக்கு 466 பேருக்கு ஆசிரியர் உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மலையகப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி தரத்தை மேலும் உயர்த்தவதற்கே மலையகப் பாடசாலைகளுக்கு ஆசிரியர் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
தோட்டப் பகுதி மாணவர்களை ஏனைய பாடசாலை மாணவர்களை போன்று சமூகததுக்கு கொண்டு வருவதற்கு ஆசிரியர் உதவியாளராக நியமனம் பெற்றவர்கள் அக்கறை கொள்ள வேண்டும்.
அத்தோடு அசிரியர் உதவியாளராக நியமனம் பெற்றவாகள் அவர்களுக்கு கிடைத்திருக்கும் பாடசாலையின் அபிவிருத்திக்கும் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுகொடுப்பதற்கும் பொருப்புடன் சேவையாற்ற வேண்டும் என்றும் மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர்களான அசோக ஜயவர்தன, உதயகாந்த குணதிலக்க, மாகாண பிரதான செயலாளர் ஹேரத் பி.குலரத்ன, கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
43 minute ago
2 hours ago