2025 ஜூன் 28, சனிக்கிழமை

மஹிந்தவை தோற்கடித்து வெள்ளை வான் காலாசாரத்தை தடுக்க வேண்டும்: ரணில்

Sudharshini   / 2015 ஜூன் 28 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.எம்.ரம்ஸீன்

ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று சகல கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஆட்சியமைக்கும். இனவாதத்தின் மூலம் மீண்டும் அதிகாரத்துக்கு வர முயற்சிக்கும் மஹிந்தவை தோற்கடித்து, நாட்டில் மீண்டும் வெள்ளை வான் கலாசாரம் தோன்றுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கம்பளை அத்காலை பகுதியில் சனிக்கிழமை (27) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில்; கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

எதிர்வரும் பொதுத் தேர்தல் விருப்பு வாக்கு முறையில் நடைபெறும் இறுதித் தேர்தலாக அமையும். நாட்டு மக்களுக்கு நல்லாட்சி தேவைப்பட்டது. இந்த நல்லாட்சியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஏற்படுத்தினோம். அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினோம்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தனித்தனியே போட்டியிடவுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு  முதலான கட்சிகள் உட்பட பல கட்சிகள் தனித்துப்  போட்டியிடும். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் போட்டியிடும்.

இக்கட்சி இரண்டாக பிளவுபட்டு களமிறங்கலாம். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் சிலர் மஹிந்த ராஜபக்சவை மீண்டும் கொண்டு வர முயற்சிக்கினறனர். அவர்கள் எதை செய்வார்கள் என்று எமக்குத் தெரியாது.

நாட்டு மக்கள் நல்லாட்சிக்கும் மாற்றத்திற்கும் ஜனவரி 8ஆம்; திகதி தங்களது வாக்குரிமையை உபயோகித்தார்கள். எனவே, ஜனவரி எட்;டாம் திகதி ஏற்பட்ட மாற்றத்தைப் பாதுகாக்க வேண்டும். யுத்ததின் பின்பு தம்மை மட்டும் வளப்படுத்திக் கொண்டவர்களை மீண்டும் தோற்கடிக்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று சகல கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஆட்சியமைக்கும். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறும்.    

மேலும், சகல கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தேசிய அரசாங்கம் என்ற அடிப்படையில் ஆட்சியை அமைப்போம். ஆனால், எதிர்க்கட்சியில் சிலர் இதனை விரும்பவில்லை.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க வேண்டும். நாட்டை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது. புதிய ஆட்சியில் நல்லாட்சி தொடரும். அத்துடன், பத்து இலட்சம் தொழில் வாய்ப்புக்களையும் உருவாக்குவோம் என்றார்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .