2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சம்மேளனத்தின் கவனத்தை ஈர்க்கவே போராட்டத்தை ஆரம்பித்தோம்: இ.தொ.கா

Kogilavani   / 2015 ஜூலை 07 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சனைக்கு உரிய தீர்வு காண்பதற்காக முதலாளிமார் சம்மேளனத்தின் கவனத்தை முழுமையாக ஈர்ப்பதற்காகவே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மெதுவாக வேலை செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது' என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்தது.
 
இதுதொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்களில் ஒருவரான  எம்.வேங்குருசாமி  ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பெருந்தோட்ட தொழிலாளர்கள் அன்றுதொட்டு, இன்றுவரை அற்ப சொற்ப ஊதியங்களால் அவ்வப்போது கூடிவரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றார்கள். அதேவேளை இதற்கு பரிகாரம் காணும் பொருட்டு, அவ்வப்போது சம்பள உயர்வுகள் எட்டப்பட்டே வந்துள்ளன.

இவை பல இன்னல்களுக்கிடையே பெறப்பட்டவையாகும்.  இ.தொ.கா வின் பங்குப் பணியை எவராலும் குறைத்து எடைபோட்டுவிட முடியாது. இந்த நிலையில் இன்றைய வாழ்க்கைச் செலவை சமாளிப்பதற்கு ஏற்ற அடிப்படையில், குறைந்த சம்பளத்தை பெற்றுவரும் தோட்டத் தொழிலாளர்களை பாரிய நீண்ட காலப் போராட்டத்தில் தள்ளுவது ஒரு விவேகமான செயலாக மாட்டாது என்பதை இ.தொ.கா உணர்ந்துள்ளது.

இதற்காகவே தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்துக்கும் அன்றாட வேலைக்கும் பங்கம் ஏற்படாத வகையில் மெதுவாகப் பணி செய்யும் தொழிற்சங்கப் போராட்டத்தை பரவலாக பெருந்தோட்டங்களில் மேற்கொண்டு வருகின்றது.

முதலாளிமார்களின் முழுகவனத்தையும் ஈர்ப்பதற்காகவே இந்த மெதுவான வேலை செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இன்றைய வாழ்க்கைச் செலவு, தொழிலாளர்களின் தற்போதைய சம்பளம் வேலை நாட்கள் குறைப்பு ஆகியவை உள்ளிட்டு பல்வேறு காரணங்களை முதலாளிமார் சம்மேளனம் உணர்ந்து நியாயபூர்வமான பேச்சு வார்த்தைக்கு பெருந்தோட்ட மக்களை பெரும்பாலும் பிரதிநிதித்துவப்படுத்தும். இ.தொ.கா வை பேச்சு மேசைக்கு அழைத்தால், அது எப்போதும் பங்கு பற்றத் தயாராகவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .