Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Kogilavani / 2015 ஜூலை 10 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக, ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் 9 பேர் போட்டியிடவுள்ளதாக கூட்டணி அறிவித்துள்ளது.
நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் மேற்படி 9 பேரும் போட்டியிடுகின்றனர். கூட்டணி வேட்பாளர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று வெள்ளிக்கிழமை(10) வேட்புமனுவில் கையொப்பமிட்டனர்.
நுவரெலியா மாவட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ.ராதாகிருஸ்ணன், தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் எம்.திலகராஜ் ஆகியோரும் கண்டி மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியின் உபதலைவர் வேலுக்குமார், பதுளை மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளர் ஏ.அரவிந்குமாரும் போட்டியிடவுள்ளனர்.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியினதும் தமிழ் முற்போக்கு கூட்டணியினதும் தலைவர் மனோகணேசன், ஜனநாயக மக்கள் முன்னணி உப செயலாளர் சண்.குகவரதன், இரத்தினபுரி மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் எம்.சந்திரகுமார் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி கம்பஹா மாவட்ட செயலாளார் எஸ.சசிகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
1 hours ago