2026 மே 14, வியாழக்கிழமை

9 வயது சிறுவன் உட்பட கர்பிணியின் சடலங்கள் மீட்பு

Kogilavani   / 2015 ஜூலை 12 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல், நிகதலுபொத பகுதியில்  39 வயதுடைய கர்பிணியொருவரையும் அவரது 9 வயது மகனையும், கிணறொன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (12) காலை சடலங்களாக மீட்டதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளதுடன் இதுதொடர்பில் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பச் சண்டை காரணமாக இவ்விருவரும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் சடலங்கள் தற்போது, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .