2025 ஜூன் 25, புதன்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; நால்வர் படுகாயம்

Sudharshini   / 2015 ஜூலை 19 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ,பா.திருஞானம்

நுவரலியா கம்பளை பிரதான வீதி ஊடாக கொத்மலை பலாகொல்ல பகுதியில் சென்று கொண்டிருந்த கெப் ரக வாகனம், வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த  பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்த நிலையில் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டியிலிருந்து நுவரெலியா நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த கெப் ரக வாகனம், மேற்குறிப்பிட்ட பகுதியில் வைத்து வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையிலே நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) விபத்துக்கள்ளாகியுள்ளதென கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வித்தில் படுங்காயமடைந்த நால்வரில் ஒருவரை மேலதிக சிகிச்சைகளுக்காக கொத்மலை வைத்தியசாலையிலிருந்து கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .