Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 20 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் பணிபுரியும் இளைஞர், யுவதிகளின் பிரச்சினைகளை நான் நன்கு அறிந்தவன். அவர்கள் குறித்து எவரும் கவலைப்படுவதில்லை. யாரும் வழிகாட்ட முன்வருவதில்லை. பிரச்சினைகளுக்கான தீர்வும் காணப்படுவதில்லை. ஆனால், நான் தேர்தலில் வெற்றி பெருகின்றேனோ இல்லையோ இளைஞர், யுவதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற முன்வருவேன்' என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பதுளை மாவட்ட வேட்பாளர் வி.தேவராஜா தெரிவித்தார்.
'மக்கள் தமக்கு சேவை செய்யக்கூடிய ஒருவரை, பொய் வாக்குறுதி வழங்காத ஒருவரை, மக்களின் நலநன மட்டும் கருத்தில் கொண்டு சிந்தித்து செயலாற்ற கூடியவர்களை தேடிகொண்டிருக்கிறார்கள். அந்த தெரிவாக நான் இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்' என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பதுளை மாவட்ட இளைஞர், யுவதிகளுடனான சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களாக ஏன் நிற்கின்றீர்கள்? என பலர் கேள்விகேட்கின்றனர். நான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டால் பேரினவாத கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதாக பிரசாரப்படுத்துகின்றார்கள். பொதுஜன ஐக்கிய முன்னணியில் இணைந்து போட்டியிட்டால் வெற்றிலையில் ஏன் போட்டியிடுகின்றீர்கள்? என கேளிவியெழுப்புகின்றார்கள்.
'உங்களை போன்ற மக்களிடையே இவ்வாறான கேள்விகள் எழாமல் இருப்பதற்காகவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றேன்' என்றும் அவர் தெரிவித்தார்.
'நான் எந்த தொழிற்சங்கத்தையும் அரசியல் கட்சியையும் சார்ந்தவனல்ல. தொழிற்சங்க அரசியல் பேதங்களுக்கு அப்பாற்பட்டவன். அந்தவகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் நான் போட்டியிட்ட போதும் பதுளை மாவட்ட தமிழ் மக்களுக்கு நான் பொது வேட்பாளனாவேன்.
இதனையே பெரும்பாலான மக்கள் என்னை சந்திக்கும்போது மட்டுமல்ல அலைபேசி அழைப்புகளுக்கூடாகவும் தெரிவிக்கின்றனர்' என்றார்.
'என்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் உங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வும் உள்ளது. வெகு விரைவில் உங்களுக்கான விஞ்ஞாபனம் வெளியிடப்படும்' என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
23 minute ago