Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 ஜூலை 23 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.செல்வராஜ்
நாடாளுமன்ற தேர்தல் நிறைவுபெற்றதன் பின்னர், ஊவா மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட கூடிய சூழல் காணப்படுவதாக ஊவா மாகாண சபை உறுப்பினர் ஆறுமுகம் சிவலிங்கம் நேற்று (22) தெரிவித்தார்.
ஊவா மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை, மாகாண மக்கள் ஐ.ம.சு.கூட்டமைப்பிடமே வழங்கியிருந்தனர். ஆனால், கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நால்வர் சத்திய கடதாசியின் மூலம், மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவு வழங்கியதன் ஊடாக, ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மையுடன் மாகாண சபையை கைப்பற்றியது.
எனவே, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, வெற்றி பெறும்பட்சத்தில் நாடாளுமன்றுக்கு தெரிவாகி சென்றுவிடுவார். அவருடன் மேலும் மூவர் நாடாளுமன்றம் செல்வர். எனவே, ஐ.தே.க ஊவா மாகாண சபையின் பெரும்பான்மையை இழந்துவிடும்.
இதையடுத்து, ஊவா மாகாண சபையில் பிரேரணையை கொண்டு வந்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றார்.
ஊவா மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் தற்போது, ஐ.ம.சு.கூட்டமைப்பு உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் துரித நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஊவா மாகாண சபையில் ஐ.தே.க ஆட்சியின் போது பாதிக்கப்பட்ட இலங்கை தொழிலாளர்கள் காங்கிரஸ் இளைஞர், யுவதிகள் ஆட்சி மாற்றத்தின் போது கூடிய கவனம் செலுத்தப்படுவர் என குறிப்பிட்டார்.
மாகாண சபை ஆட்சியாளர்கள், திணைக்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் தமது வேலைகளை திறம்பட செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு துணை போய்விட கூடாது. மேலும் அவர்கள் விடுக்கும் எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும் அடிப்பணிய கூடாது என மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
39 minute ago
2 hours ago