Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 ஓகஸ்ட் 18 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
'மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென மலையக மக்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். அந்த மாற்றம் இன்று நேற்றல்ல 20 வருடங்களுக்கு மேலாக ஒரு கனவாகவேதான் இருந்தது. நிறைவேறாமல் இருந்த அந்த மாற்றம் இன்றுதான் நிறைவேறியுள்ளது' என நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
தலவாக்கலைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்ட போதே அவர் இதனை கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'இத்தேர்தலிலே புதிய அரசியல் மாற்றத்தையும் ஒரு புதிய அரசியல் எழுச்சியையும் எதிர்ப்பார்த்து நன்கு சிந்தித்து மலையக மக்கள் வாக்களித்துள்ளார்கள். மலையக மக்களுக்காக சேவை செய்யக்கூடிய சிறந்த தலைவர்களை உருவாக்கியுள்ளீர்கள். இந்த மாபெரும் வெற்றியை மலையக மக்களாகிய நீங்களே தீர்மானித்துள்ளீர்கள்;. நாங்கள் வெற்றி பெற்றிருக்கின்றோம் என்றால் அது எங்களின் வெற்றியல்ல முழு மலையகத்தின் வெற்றி.
5 வருட காலத்தில் மலையக மக்களுக்கு என்னென்ன சேவை செய்ய வேண்டும் என்று எமக்கு நன்றாக தெரியும். நூறு நாட்கள் வேலைத் திட்டத்தினூடாக 7 பேர்ச்சஸ் காணி, தனி வீடுத் திட்டம் போன்றவற்றை ஏற்;படுத்தி மலையகத்தில் பரவலாக 400 வீடுகளை அமைத்தேன்.
மேலும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினூடாக மலசலக்கூடம், பாதை புனரமைப்புகள் இவ்வாறான பல்வேறு வேலைத் திட்டங்களையும் முன்னெடுத்துள்ளேன்.
எனவே இனிவரும் 5 ஆண்டுகளில் மலையகத்தில் எந்தவொரு அமைச்சரும் இதுவரை காலமும் செய்யாத வேலைத் திட்டங்களை மக்களுக்கு செய்து காட்டுவேன். மேலும் மலையகத்தில் ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அடிப்படை வசதிகளை ஏற்ப்படுத்தி கொடுப்பேன்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jun 2025
21 Jun 2025