2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பேன்

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டத்தில் இருபது வருடங்களுக்கு பின் கிடைத்த தமிழ் பிரதிநிதித்துவத்தை தொடர்ந்து தக்கவைப்பேன்' என்று கண்டி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவான ஜனநாயக மக்கள் முன்னணியின் உப-தலைவர் வேலு குமார் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 'கண்டி மாவட்டத்தின் இருபது வருட அரசியல் வரலாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒற்றுமையே  இதற்கு அடிப்படைக் காரணம். இம்முறை தனிப்பட்ட கட்சிகளாக அல்லாமல் கூட்டணியாகவே நாங்கள் களமிறங்கினோம்.

தலைவர் மனோ கணேசனின் தலைமையில் திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணனுடன், தமிழ் முற்போக்கு கூட்டணியில் கூட்டாகச் செயற்பட்டோம். அதன்மூலம் கொழும்பு, கண்டி, பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுத்துள்ளோம்.

இது வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்களின் அரசியல் பலத்தை எடுத்துக்காட்டுகின்றது. புதிய நாடாளுமன்றத்தை தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றாக த.மு.கூ., இன்று எழுச்சி பெற்றுள்ளது' என்றார்.

'கண்டி மாவட்ட தமிழர்களுக்கு இருந்த அரசியல் பின்னடைவு இன்று துடைத்தெறியப்பட்டுள்ளது. எமக்கு 62,265 விருப்பு வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இது கண்டி மாவட்ட வரலாற்றில், தமிழ் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிக் கூடிய விருப்பு வாக்குகளாகும். எனக்கு இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றுத்தந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சகோதரர்களுக்கு எனதும் எனது சமூகத்தினதும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இருபது வருடங்களுக்கு பின் கிடைத்திருக்கும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை மக்கள் பணிக்காக அர்ப்பணிப்பேன்' என்றார். 'எனது பணிகள் இன, மத, பேதமின்றி தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இவ் அறிய வாய்ப்பை நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் மிளிரும் வகையில் செயற்படுத்துவேன்' என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .