2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

60 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி தேவாலய வீதியில் வைத்து, 60 போதை மாத்திரைகளுடன், சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி பொலிஸின் போதைத் தடுப்புப் பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்கள், இளைஞர்களை இலக்குவைத்தே, ஆள் நடமாட்டம் அதிகமான இந்த வீதியில் இந்த வியாபாரம் வெகுநாள்களாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது என, பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர், தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் இப்பிரதேசத்தில் இவருடன் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை ஆராய்ந்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .