2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

கடற்படையினரின் வாகனம் மோதி நபர் காயம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - சிலாபம் பிரதான வீதியில் காக்கப்பள்ளியப் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினருக்குச் சொந்தமான கப் வண்டி மோதியதில் நபரொருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (15) நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் காயங்களுக்கு இலக்கான நபர், சிலாபம் பொது வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த கப் வண்டி, குறித்த நபர், வீதியைக் கடக்க முற்பட்ட போது மோதியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் தெரியவந்துள்ளது. 

கப் வண்டியின் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X