Princiya Dixci / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தைத் தடுக்கும் வகையில் எதிர்வரும் 10ஆம் திகதியில் இருந்து 16ஆம் திகதி வரை விசேட செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் கொழும்பு மாநகரிலும் அதனை அண்மித்த பகுதிகளான தெஹிவளை நகரசபை மற்றும் கொலன்னாவ நகரசபை ஆகிய பகுதிகளிலும் டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .