2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பேர வாவியிலிருந்து நீர்நிலைப் போக்குவரத்துச் சேவை

Kogilavani   / 2017 ஜனவரி 08 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பேர வாவியை மையப்படுத்தி, நீர்நிலைப் போக்குவரத்துச் சேவையொன்றை ஆரம்பிக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், பேர வாவியை அண்மித்ததாக வாழ்ந்துவரும் குடிசை வீட்டு மக்களுக்கு, இந்த ஆண்டுக்குள் புதிய வீடுகளைப் பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதென, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பேர வாவியை அண்மித்த 150 ஏக்கர் நிலப்பரப்பை அபிவிருத்தி செய்து, புதிய வணிக மத்திய நிலையமொன்றை உருவாக்கப்போவதாக, கொழும்பு - மெக்கலம் பூங்காவை நேற்றுத் திறந்துவைத்து உரையாற்றுகையில், அமைச்சர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X