2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கொள்ளை கும்பல் கைது: 10 இலட்சம் பெறுமதியான பொருட்கள் மீட்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 19 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இசெட்.ஷாஜஹான்


பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பலை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட ஐந்து பேரை மினுவாங்கொட, ஆண்டி அம்பலம ஆகிய பிரதேவசங்களில் வைத்து செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்துள்ளதாகவும் இவர்களிடமிருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை மீட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகே தெரிவித்தார்.

குருணாகலை, மினுவாங்கொடை, வலல்லவிட்ட, வெல்லவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் குருணாகலை, மாவ, பலல்ல. வேயங்கொட, மினுவாங்கொட, மஹர ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளில் துப்பக்கியை காட்டி அச்சுறுத்தி பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பிரதான சந்தேக நபரிடமிருந்து போலி அடையாள அட்டைகள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அத்துடன், மோட்டார் சைக்கிள்கள் இரண்டு, கார் ஒன்று, ரிவோல்வர் ஒன்று, சொட்கன்; ஒன்று, சன்னம் ஒன்று, தங்கச் சங்கிலி ஒன்று, வளையல்கள் நான்கு மோதிரம் ஒன்று, கைகடிகாரம் ஒன்று என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

கைப்பற்றப்பட்டுள்ள கார் வாடகைக்கு பெறப்பட்டதாகும். அந்த காரையும், மோட்டார் சைக்கள்களையும் கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தியுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இக்கொள்ளைக் கோஷ்டியுடன் தொடர்புடைய மேலும் இருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .