2025 ஜூன் 25, புதன்கிழமை

விபசார குற்றச்சாட்டில் 11 பெண்களுக்கும் இரு ஆண்களுக்கும் சிறைத்தண்டனை

Super User   / 2011 நவம்பர் 11 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லக்மால் சூரியகொட)

கொள்ளுபிட்டி செல்லமுத்து ஒழுங்கையில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபசார விடுதியொன்றை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட 11 பெண்களுக்கும் இரு ஆண்களுக்கும் 6 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

இவ்விபசார விடுதியை நிர்வகித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ராகமையைச் சேர்ந்த ஆர். சுதத் ரோஹனவுக்கு சிறைத்தண்டனையுடன் 2 லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

இரண்டாவது எதிரியான பாதுக்கவைச் சேர்ந்த லயனல் ரட்ணசிறிககு ஒரு லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
விபசாரத்திற்காக இவ்விடுதியில் தங்கியிருந்த 11 பெண்களுக்கு நீதவான் லங்கா ஜயரட்னவினால் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பொலிஸார் இவ்விடுதியை முற்றுகையிடச் சென்றபோது மாறுவேடத்திலிருந்த உத்தியோகஸ்தர் ஒருவரிடம் விடுதியின் முகாமையாளர் 3000 ரூபா கட்டணம் வசூலித்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .