2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: முதலில் துடுப்பெடுத்தாடவுள்ள இலங்கை

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 19 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள சிம்பாப்வேக்கெதிரான குழு பி போட்டியில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் தசுன் ஷானக தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.

இலங்கையணியில் கடந்த போட்டியில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர்களான துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரண ஆகியோரை வேகப்பந்துவீச்சாளர்கள் டில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷன் ஆகியோர் பிரதியிட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .