2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

மேல் மாகாணத்திற்கு 15 திடீர் மரண விசாரணை அதிகாரிகள் புதிதாக நியமனம்

Super User   / 2012 ஜனவரி 31 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்திற்கு 15 திடீர் மரண விசாரணை அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமன கடிதங்களை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அண்மையில் நீதி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது வழங்கினார்.

மரண விசாரணைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றி கொழும்பு மருத்துவ பீட சட்ட மருத்துவ பேராசிரியர் ரவிந்திர பெர்ணாண்டோ எழுதிய கைநூல் ஒன்றும் புதிதாக நியமனம் பெற்ற திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் நீதி அமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .