Yuganthini / 2017 ஜூன் 20 , பி.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 14 சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் முடிவுகளுக்கு ஒன்றிணையாமை, கட்சித் தலைவரை விமர்சிக்கின்றமை, மாற்று கட்சிகளை ஆரம்பித்து கட்சியின் உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், குறித்த உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தற்போது நிறைவுக்கு வந்துள்ளதால் விரைவில் குறித்த நபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் இது குறித்து கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 minute ago
49 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
49 minute ago
52 minute ago