2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் கண்காணிப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 02 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(காந்த்ய சேனநாயக்க)

தெஹிவளை முதல் கொள்ளுப்பிட்டி வரை உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் சட்டபூர்வ தன்மை மற்றும் குறித்த வருடத்தில் முகவர் நிலையமாக செயற்படுவதற்கான அனுமதிப் பத்திரம் பெறப்பட்டுள்ளதா என்பன குறித்து  சோதனையிடப்படும் என மோசடிப் புலனாய்வுப் பணியகம் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தது.
 
இதன் முதற் கட்டமாக, தெஹிவளை முதல் கொள்ளுப்பிட்டி வரையிலுள்ள முகவர்  நிலையங்கள் சோதனையிடப்பட்டு விபரங்கள் தொகுக்கப்படவுள்ளன. கொழும்பில் செயற்படும் சட்டவிரோத வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை முறியடிப்பதற்காகவும் சட்டபூர்வமாக இத்தொழிலில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதற்காகவும்  இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை மோசடி செய்த மோசடியான நிறுவனங்கள் குறித்து புகார்கள் கிடைத்துள்ளன.  இதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம் என மோசடிப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .