2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அதிபர் நியமனங்களில் இனம்,மதம் கருத்திற் கொள்ளப்படுவதில்லை: மேல் மாகாண முதலமைச்சர்

Super User   / 2012 ஜனவரி 19 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்தர)

இரத்மலானை இந்துக் கல்லூரி அதிபர் எதிர்ப்பு காரணமாக நீக்கப்பட்ட போதிலும், பாடசாலை அதிபர் நியமனங்களின்போது இனம், மதம் என்பவற்றை அதிகாரிகள் கருத்திற்கொள்வதில்லை என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று வியாழக்கிழமை கூறினார்.

இக்கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்ட ஆர். உதயகுமார் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டமை குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். உதயகுமார் இந்துவாக இருந்தபோதிலும் அவரின் மனைவி கிறிஸ்தவர் என்பதால் இந்நியமனத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறுகையில்,

'மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர் நியமனங்கள் விளம்பரங்கள் மூலமாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது. இவ்விடயத்தில் நாம் மதம், இனம் ஆகியவற்றை கவனத்தில்  கொள்வதில்லை. திறமை, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன' என்றார்.

உதயகுமாரின் நியமனம் குறித்து அவர் கூறுகையில், 'பாடசாலை அதிகாரிகள் அவரை ஏற்றுக் கொள்ளாததால் நாம் அவரை வைத்திருக்க முடியவில்லை. எனவே புதிய அதிபரின் மூலம் அவர் மாற்றீடு செய்யப்படுவார். உதயகுமார் நீக்கப்பட்டுள்ளதுடன் நிரந்தர அதிபர் நியமிக்கப்படும்வரை தற்காலிக அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வெற்றிடம் விளம்பரப்படுத்தப்பட்டு, வர்தமானியில் வெளியிடப்படும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0

  • neethan Friday, 20 January 2012 02:46 PM

    நீங்கள் இப்படி கூறினாலும் பேரினவாதிகளிடம் ஒரு அஜெண்டா உள்ளது, 2009 ல் ஆயுத மோதல் முடிவுடன் உக்கிரமடைந்துள்ளது, உதயகுமார் விவகாரம் நொண்டி சாட்டு. தமிழ் பேசும் அரசியல் வாதிகளின் மத்தியில் ஐக்கியமின்மை அஜண்டாவை அமுல் நடத்துவதற்க்கு சாதகமாக உள்ளது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .