2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

புதிய சொகுசு பஸ் சேவைகள் அடுத்தமாதம் அறிமுகமாகும்

Super User   / 2012 ஜனவரி 31 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்தர)

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய சொகுசு பஸ்கள் கொழும்பு நகரின் 6 வழித்தடங்களில் பெப்ரவரி மாதம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு இன்று தெரிவித்தது.

குறைந்த உயரத்திலான தரையைக் கொண்ட, குளிரூட்டப்பட்ட இந்த பஸ்கள் மொரட்டுவை – புறக்கோட்டை, கெஸ்பாவை- புறக்கோட்டை, நீர்கொழும்பு-புறக்கோட்டை, கம்பஹா- புறக்கோட்டை, கடுவெல – கோட்டை (மாலபே ஊடாக), ஹோமாகம- புறக்கோட்டை ஆகிய வழித்தடங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்த பஸ்கள் போக்குவரத்து நெரிசலையும் பயண நேரத்தையும் குறைப்பதுடன், பயணிகளுக்கு பெரும் சௌகரியத்தையும் வழங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதற்கான முன்னோடி நடவடிக்கையாக வொல்வோ மற்றும் டாட்டா ரக பஸ்கள் ஏற்கெனவே மொறட்டுவை- புறக்கோட்டை மற்றும் நீர்கொழும்பு – புறக்கோட்டை வழித்தடங்களில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  இந்த பஸ்களில் சாதாரண கட்டங்களைவிட இருமடங்கு தொகை கட்டணமாக அறவிடப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0

  • meenavan Tuesday, 31 January 2012 11:57 PM

    கட்டணங்களை இருமடங்காக்கினால் பயண நேரம் இருமடங்கால் குறையுமா?

    Reply : 0       0

    amn Wednesday, 01 February 2012 02:16 AM

    Good question Meenavan, also will they limit the passengers to seet numbers?

    Reply : 0       0

    meenavan Wednesday, 01 February 2012 03:00 AM

    Tks amn they limit the passengers according to the seats, but we can expect traffic jam, its obvious.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .