2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஐ.நா. உணவு விவசாய ஸ்தாபன உதவியுடன் இலங்கைக்கு மீன்பிடி வரைபடம்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 03 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய நாடுகளின் உணவு விவசாய ஸ்தாபனத்தின் துணையுடன் இலங்கையின் கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவராண்மையும் (நாரா) இலங்கையின் முதலாவது தொகுதி மீன்பிடி வரைபடத்தை உருவாக்கியுள்ளன.

முதலாவது மீன்பிடி வரைபடத்தை இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான பிரதிநிதி பட்ரிக் இவான்ஸ் கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் தமித்த டி சொய்சாவிடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த 30ஆம் திகதி நடைபெற்றது.

இந்த வரைபடமானது பல வண்ணங்கள் அலங்கரிக்கக்கூடியவாறு இலங்கையின் தேசிய நிலவரைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் வடமேற்கு, தெற்கு, கிழக்கு கரையோரங்களில் கடற்பாசி, சிங்கி இறால், கூனி இறால் சமுத்திரவியல் அலங்கார மீன்வகைகள் போன்ற வணிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் ஏற்றுமதி சார்ந்த வளங்கள் பற்றிய ஆய்வுகள் மற்றும் முகாமைத்துவ திட்டங்களை உள்ளடக்கும் வகையில் உருவாக்கப்பட்டதாகும்.

இதற்கு கனேடிய சர்வதேச அபிவிருத்தி முகவராண்மை (சீடா), விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம்  ஆகியவற்றினால் அமுலாக்கப்படும் திட்டங்கள் மூலம் நிதி வழங்கப்பட்டதுடன், உணவு விவசாய ஸ்தாபனம் மூலமாக தொழில்நுட்ப உதவி வழங்கப்பட்டது. இவற்றின் ஊடாக இந்த வளங்களின் வியாபகம், மிகையான தன்மை பற்றி பரந்த ஆய்வை நடத்த தேசிய நீரியல்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவராண்மைக்கு (நாரா)  வழிகிடைத்தது. தேசிய நீரியல்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவராண்மையும் (நாரா) கடற்றொழில் நீரியல்வள திணைக்களமும் இத்தகைய பெறுமதியான வளங்களை நிலைபேறான வகையில் பயன்படுத்துவதற்குரிய முகாமைத்துவ திட்டங்களை வடிமைக்கும் முயற்சிகளில் கடற்றொழில் துறையில் சம்பந்தப்பட்டுள்ள மீனவ சமூகங்கள், வர்த்தர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களை சிறப்பான முறையில் ஒன்றுபடுத்தியிருக்கின்றன.

மீன்பிடி வரைபடத்தில் வர்ணமயமான புகைப்படங்கள், நிலவரைகள் போன்றவை அடங்கியுள்ளன. இந்த வரைபடம் வடமேற்கு, தெற்கு, கிழக்கு கரையோரங்களில் கடற்பாசி, சிங்கி இறால், கூனி இறால் சமுத்திரவியல் அலங்கார மீன்வகைகள் போன்றவை பற்றிய பெருமளவு தரவுகளையும் தகவல்களையும் கொண்டுள்ளது. இது கடற்றொழில் நீரியல்வள அமைச்சு கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அமுலாக்கும் உணவு விவசாய ஸ்தாபன நிறுவனத்தின் மற்றொரு பிராந்திய திட்டமான பிராந்திய கடற்றொழில் வாழ்வதாரத் திட்டம்' வழங்கிய நிதியுதவியுடன் அச்சிடப்பட்டுள்ளது. இந்த வரைபடம் மீன்பிடித்துறை சார் முகாமையாளர்கள், ஆய்வாளர்கள், பல்கலைக்கழக கல்விமான்கள், மீன் வியாபாரிகள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரை மாத்திரமன்றி கடற்றொழில் துறையில் ஆர்வம் காட்டும் பொதுமக்களையும் இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இந்த வரைபடம் தயாரிக்கப்பட்டமையானது இலங்கையின்  பெறுமதியான கரையோர மீன்வளங்களை நிர்வகிக்கக்கூடிய கூட்டான கடற்றொழில் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் கடற்றொழில் நீரியல்வள அமைச்சின் தினக்குறிப்பேட்டில், வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .